Wednesday, September 11, 2013

சரித்திரத்தை மாற்ற நினைத்த சதுரங்கப் பெட்டி




                    மாவீரன்  நெப்போலியன்  செயின்ட் ஹெலினா  தீவில்  சிறை வைக்கப்பட்டிருந்த போது  அவரைக் காண வந்த  நண்பர் ஒருவர் விலை  உயர்ந்த  சதுரங்கப் பெட்டி ஒன்றைப் பரிசளித்தார். நெப்போலியன்  அதனை வைத்து தனியாகவே விளையாடி மகிழ்ந்தார்.கி.பி.1821ல் நெப்போலியன் மறைவுக்குப் பிறகு ,அது ஏலத்தில் விடப்பட்டது.பலர் கைகளுக்கு மாறியது.அதை வைத்திருந்த ஒருவர் தற்செயலாகத் திருகிய பொழுது, அது திறந்து கொண்டது.அதனுள் ஹெலீனா தீவிலிருந்து தப்பித்துச் செல்வஙதற்கு வழிகாட்டக்கூடிய வரைபடம் இருந்தது.துரதிர்ஷ்டவசமாக நெப்போலியன் திறந்து பார்க்கவில்லை.அவ்வாறு பார்த்திருந்தால் அவர் தப்பித்திருந்திருப்பார்.சரித்திரமே மாறியிருக்கும்.

                                         முத்துமாணிக்கம்,கிருஷ்ணன்கோவிலிலிருந்து.
                                         (பெற்றோர் ஆசிரியர்கழகச் செய்தியிலிருந்து)

Sunday, April 14, 2013

தமிழ் மகளே !தலை மகளே !




§  சித்திரையே!
§  தமிழ் மாதத் தலைமகளே!! மன
§  நித்திரை நீக்கிடும் பொன்மகளே!! இனிய
§  முத்திரை பதித்திடு பூமகளே !! உன்
§  வரவால் உளம் பூரிக்குமே!!
§  வளமே தந்திட்டு வாழ்வளிப்பாய்!!
o   வானகமே! புகழ் வையகமே!!உன்
o   வரவாலே வாழ்வில் வசந்தமே......

                                    

Sunday, January 13, 2013

பொங்குக பொங்கல்


                             பொங்குக  பொங்கல்
                             தங்குக  மங்கலம்
                           
                             நாடு முழுவதும் சங்கராந்தி
                             மங்கலம் தந்திடும் மனசாந்தி

                            இயந்திர வாழ்வின் இயக்கத்திலே
                            இனிமை  சேர்த்திடும் இனிய விழா

                            இயற்கையை  வணங்கிடும்
                            இன்ப  விழா!
                            இருளை நீக்கி ஒளியை ஏற்றும்
                            இரவியின் கதிரைப் போற்றும் விழா!

                  இனிமை பொங்குக!

                  வளமை  தங்குக!