வையம் வாழ வாழ்ந்திட நினைத்திருந்தால்
வந்திருக்காதே இந்த சோகம் யாவும்
கம்பீரமான இரு கட்டிடங்கள்
கற் குவியல்களாய்!
சகித்திட முடியாத சாக்காடு
தீர்த்திட முடியாத தீவிரவாதம்
அணுகுண்டுகளின் ஆக்கம்
அகிலம் முழுவதுமே அதன் தாக்கம்
எல்லோரும் நலம் பெறவேண்டும்
என எண்ணியிருந்தால்
ஏனிந்த அழிவு?
அன்போடு வாழும் ஆவல் கொண்டால்
அவனியில் ஏனிந்த அழிவு?
அன்றைய நாளில்,மரணம் வந்தது
காலராவாய், அம்மை நோயாய்
ஃப்ளேக்காய் ,எலும்புருக்கியாய்
அனைத்தையும் தடுத்தோமே-நம்
அறிவியல் ஆற்றலால் !
அணுகுண்டு ஆற்றலால்
அள்ளிக் கொடுக்கின்றோம்
மரண தேவதையின் மடியே
நிரம்பி வழிகின்றது.
தீவிரவாதம் புரியும்
தீயவர்களைத் தீயிலிடுங்கள்
மதவாதத்தால் மாய்ந்திடும்
மடையர்களை மண்ணிலிடுங்கள்
களங்கம் புரியும் கயவர்களை
காற்றோடு கலந்திடுங்கள்
அட்டூழியம் புரியும் அற்பர்களை
ஆகாயத்திற்கு அனுப்புங்கள்
நாசம் செய்யும் நீசர்களை
நீர்ப் பெருக்கிலிடுங்கள்.
பஞ்ச பூதமும் பங்கிட்டுக் கொள்(ல்)ளட்டும்
பகையாளிகளை,பின்னர் நம்
அன்னை பூமி
அழகின் வடிவமாகட்டும்,
அன்பிலே தோயட்டும்
வையம் வாழ்ந்திடட்டும்
நாமும் வாழ்வோம் !
நலமாய் வாழ்வோம் !!
1 comment:
vinai vithaithavan vinai aruppan.
The theme of this kavithai shows the above meaning.
So AHIMSAI only will win for ever.
Post a Comment