மனதில் மலர்ந்திட்ட மலர்களை
கவிமாலையாக்கி காணிக்கையாக்குகின்றேன்
கர்ம வீரனின் கமலபாதங்களிலே
தமிழகத்தின் வரலாற்றில் ஒரு முத்திரைச்சொல்
கர்ம வீரன்-ஒரு
கறுப்பு மனிதன் கர்மவீரன் ஆனகதை கேளுங்கள்
காமராசரே,நீர் பிறக்குமுன்பே விருது
கிடைத்து விட்டதே,உந்தன் மண்ணுக்கு!
நீ அங்கே அவதரிக்கப் போவதை
அறிந்தா?அல்லது அறிவிக்கவா?
இராசாசியின் எழுத்து,
அண்ணாவின் பேச்சு,
அம்மையின்ஆங்கில வளம்
கலைஞரின் தமிழ்ப்புலமை
இத்திறம் ஏதும் இல்லாது
எத்திறத்தில் நீ வென்றாய்?
காலங் கடந்து நின்றாய்?
மணம் புரிந்திடவில்லை-மக்களின்
மனம் புரிந்ந்திட்டாய்
மதிய உணவு தந்தாய்
மகத்தான தலைவனானாய்-மாணவரின்
கல்விக் கண்ணைத் திறந்தாய்
காலங்கடந்து நின்றாய்
அணுவிஞ்ஞானியின் ஆற்றலும்
பாரிஸ்டரின் பண்பு நலனும் கொண்ட
கறுப்பு காந்தியே,
பாரதம் போற்றும் தலைவனே,
சாதனை நாயகன் உன்னைச் சிலர்
சாதிச் சிறையில் அடைத்திட்டாலும்
மழைத்துளி பருகிய சக்கரவாகம் நீ
மக்களின் தலைவனல்லவா?
சிவகாமி மகனிடம் சேதி சொல்லச் சொல்லி
கவியரசு சொன்னவை
கொட்டிலிலே தோன்றிக் குவலயத்தில் பேரெடுத்து
இட்டமுடன் சேர்ந்தோர்க்கு இறைவனாய் தோற்றமுற்ற
ஏசுபிரான் மேற்றிசையில்!
இளைப்பிரான் கீழ்த்திசையில்!
சத்தியமே தெய்வம் சமத்துவமே வாழ்க்கையென
இத்தரையில் ஓர் நாள் இளவரசாய் வந்துதித்த
புத்தபிரான் நேபாளம்!புனித பிரான் விருதுநகர்!
மென்மையான தலைவனின் மேன்மை உரைக்க
இதைவிடச் சான்றும் வேண்டுமோ?
Wednesday, July 14, 2010
Monday, July 12, 2010
அகல் பிஞ்சுகள்
குடும்ப அகலில்
திரிகள் இவர்கள்
வாழ்வு சுடர்விடாவிடினும்
இருள் சூழாது
காத்திடும் வெளிச்சங்கள்
ஆனால்,
பிஞ்சுகளின் நிலையோ
மெழுகு கூட அல்ல,
பட்டாசே, வெடித்துச்
சிதறி வீணாகும்-அல்லது
ஏதுமில்லா புஸ்வாணம் தான்!
திரிகள் இவர்கள்
வாழ்வு சுடர்விடாவிடினும்
இருள் சூழாது
காத்திடும் வெளிச்சங்கள்
ஆனால்,
பிஞ்சுகளின் நிலையோ
மெழுகு கூட அல்ல,
பட்டாசே, வெடித்துச்
சிதறி வீணாகும்-அல்லது
ஏதுமில்லா புஸ்வாணம் தான்!
செய்தித் துளி
உலகின் 17 பல்கலைக்கழகங்களிலும் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர்,மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.இராதாகிருஷ்ணன்.
Subscribe to:
Posts (Atom)