Sunday, December 16, 2012
Saturday, November 24, 2012
Friday, October 5, 2012
Tuesday, September 18, 2012
அந்த நீல(ள)க் கடற்கரையில்!
பரந்து விரிந்த பரப்பிலே
பற்பல காட்சிகள் ,
ஆதிக்கு சமமாகித் துயிலும்
ஆன்றோர்கள் ஒரு பக்கம்,
ஆழிக்கே வெளிச்சம் காட்டும்
ஆகாயம் தொட எத்தனிக்கும்
கலங்கரை விளக்கு மறு பக்கம்!
அலைகளிலே ஆர்ப்பரித்து
விளையாடும்
அன்பர் கூட்டம் ஒரு பக்கம்
அலை கடலின் மேல் அழகாய்
மிதக்கும்
அருமை நகரம் மறு பக்கம்!
அலைகடலுக்கருகிலேயே
அங்காடித் தெரு ஒரு பக்கம்
அங்கே வலையில் விழுந்ததை
வகையாய்
ஆக்கித் தருகுது மறு பக்கம்!
பழக் கடைகள் ஒரு பக்கம்
பஜ்ஜியும்,பக்கோடாவும்
மறுபக்கம்!
பந்தயக்குதிரை போல் பழக்கிய
குதிரை ஒரு பக்கம்
பலூனைக் குறி வைத்துப்
பயிற்சி செய்வோர் மறு பக்கம்!
பட்டாணி சுண்டல் பாரம்பரியம்
கடற்கரை தோன்றிய போதே தோன்றியதோ?
பல(ழ) கலவைக் காட்சிகள்
பாரம்பரியக் கடற்கரையில்!
Tuesday, September 4, 2012
Saturday, August 18, 2012
ஆளுக்கொரு கோப்பை
- தேநீர் பருகும் கணங்கள்
- சில நிமிடத் திருவிழாக்கள்
- தேநீர்க் கோப்பை
- ஒரு
- கையடக்க சந்நிதானம்
- கூப்பிட்ட போது
- வரம் தந்தோடிப் போகும்
- மலிவு தெய்வம் தேநீர்
- உதடுகளில் சூடு கொளுத்தி
- கதகதப்பாய் நாவுதடவி
- சுவையரும்புகள் ஒவ்வொன்றாய்த்
- தொட்டெழுப்பி
- இனிப்பு கடந்தொரு துவர்ப்பு பரப்பி
- தொண்டையில் நழுவும்போதே
- ரத்தக் குழாய்கள் புடைக்க மலர்த்தி
- குடலில் விழுந்த மறுகணம்
- மூளையின் திரிகளில் அது
- சுடர் கொளுத்தும் போது
- மோட்சத்தின் பக்கத்து வீதிவரை
- சென்று திரும்பும் ஜீவாத்மா.
- குவளைத் தேநீரில்
- ஐம்பூதம் அடக்கம்
- தேயிலைச் செடியின் வேர்வழி புகுந்து
- பச்சிலை எங்கும் பரவிய மண்
- தேயிலையின் சாரம் வாங்கித்
- தன்னிறமிழந்து செந்நிறமான நீர்
- தேநீர் சுடவைக்கத்
- தித்திக்கப் பரவிந தீ
- பிஞ்சுத்தேயிலை மணத்தைப்
- பிரசாரம் செய்யும் ஒரு துண்டுக்காற்று
- இலை
- தலை குளித்த மழை வழியே
- துளித் துளியாய் ஆகாயம்
- ஐம்பூதங்களையும் இப்படி
- உள்வாங்கி நுரைக்கும்
- ஒரு கோப்பை
- வைரமுத்து அவர்களின் கொஞ்சம் தேநீரிலும் கொஞ்சம்
Sunday, August 5, 2012
Friday, July 20, 2012
Friday, April 13, 2012
Sunday, April 8, 2012
விதிமுறைகள்?
சீச்.....சீ.........உன்னையா ?
சமாதானமா?
சண்டையிடு .
மன்னிப்பா?
பழி வாங்கு .
பெண்ணுக்குச் சமத்துவமா?
போகப் பொருளாக்கிப்
பொழுதைப் போக்கு .
அயலான் நேசமா?
அகப்பட்டதைச் சுருட்டி
வயிற்றைக் கழுவு .
எளியவனிடம் இரக்கமா?
எவன் சொன்னது?
வழி மறித்து வாயில் போடு .
கலாச்சாரமா?
கவலைப் படாதே
பண்பாடா?
உடைப்பில் போடு .
கண்டிப்பார்களா
உன்னையா ?சீ.....சீ
விலங்குகளுக்கு
ஏது விதிமுறைகள் ?
-சூரியதாஸ்
சமாதானமா?
சண்டையிடு .
மன்னிப்பா?
பழி வாங்கு .
பெண்ணுக்குச் சமத்துவமா?
போகப் பொருளாக்கிப்
பொழுதைப் போக்கு .
அயலான் நேசமா?
அகப்பட்டதைச் சுருட்டி
வயிற்றைக் கழுவு .
எளியவனிடம் இரக்கமா?
எவன் சொன்னது?
வழி மறித்து வாயில் போடு .
கலாச்சாரமா?
கவலைப் படாதே
பண்பாடா?
உடைப்பில் போடு .
கண்டிப்பார்களா
உன்னையா ?சீ.....சீ
விலங்குகளுக்கு
ஏது விதிமுறைகள் ?
-சூரியதாஸ்
Monday, April 2, 2012
Saturday, March 31, 2012
மதிப்புக் கொடுங்கள்
கேட்டு வாங்கிட இது என்ன
கடைச் சரக்கா?
''எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்''
பொய்யா மொழிப் புலவனின்
பொன் மொழி.
எல்லோரையும் பணிதல் என்பது
ஏற்புடையதே என்றாலும்
ஏற்போரின் செயல்பாடும் அதிலடங்கும்
ஆனால்,
முதுமை என்பது வாழ்வின்
வழிகாட்டி,
அன்றைக்கு ஆற்றலின் அரங்கம்
இன்றைக்கு அனுபவச் சுரங்கம்
அந்த ஆற்றலின் அரங்கு தந்த
அனுபவங்களாலே தான்-நம்
வாழ்க்கைப் பாதை வளமாகும்
நலமாகும்.
கடைச் சரக்கா?
''எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்''
பொய்யா மொழிப் புலவனின்
பொன் மொழி.
எல்லோரையும் பணிதல் என்பது
ஏற்புடையதே என்றாலும்
ஏற்போரின் செயல்பாடும் அதிலடங்கும்
ஆனால்,
முதுமை என்பது வாழ்வின்
வழிகாட்டி,
அன்றைக்கு ஆற்றலின் அரங்கம்
இன்றைக்கு அனுபவச் சுரங்கம்
அந்த ஆற்றலின் அரங்கு தந்த
அனுபவங்களாலே தான்-நம்
வாழ்க்கைப் பாதை வளமாகும்
நலமாகும்.
Monday, March 26, 2012
நல்லதோர் வீணை செய்தே........
நல்லதோர் வீணை செய்தே -அதை
நலங் கெடப் புழுதியில் எறிந்து
விட்டாயே ! சிவ சக்தி
நீ தந்த சுடர் மிகு அறிவால் உலக
சூட்சுமம் உணர முடியவில்லையே!
மரபின் மைந்தன் சொன்னார்
சிறப்பான தலைமை உனக்கு
வாய்க்கப் பெறவில்லையென்றால்
அது துரதிர்ஷ்டமென்று!
பணிக்காலம் பலருக்கு
துரதிர்ஷ்டமே!
துரியோதன மனத்தின் விளைவா?
துர்மனத்தின் துன்பம்தரும் கலர்கண்ணாடியா?
மெத்தப் படித்த மேதாவித் தனத்தால்
மேலாண்மையை மேலாண்மை
செய்ய இயலவில்லை.
ஆண் தலைமை அரக்கத்தனமாய்,
பெண் தலைமையோ அசுரத் தனமாய்!
ஆசுவாசம் தேடி அடைக்கலமானேன்
வகுப்பறையில்!
எந்தன்
சுவாசத்திலே சுகந்தம்
மூச்சிலே உயிர்ப்பு
மலர்க்கூட்டம் எந்தன்
முன்னால்,
ஆஹா!
ஆசையாய்ப் பேசினேன் அதனிடத்தில்
அலுவலக அறையிலிருந்து அழைப்பாம்!
அய்ந்து நிமிடம் கூட ஆகவில்லை,
ஆறு மாதத்திற்கு முன் விட்டுப் போன கையெழுத்தாம்,
அரைகுறையாய் விட்டது தொடர்ந்தேன்
அடுத்த வகுப்புப் பிள்ளை வந்தாள்,
''அன்பரசியை அறிவியல் ஆசிரியை''கூப்பிடறாங்க,
''போ'' சொல்லிவிட்டுப் பாடத்துள் புக முயன்றேன்
''இழுப்பறையில் இங்கிலீஷ் நோட் இருக்கிறதாம்''
இளவரசி வந்து நின்றாள்
''இம்சை''என்றபடி கொடுத்துவிட்டு நிமிர்ந்தேன்
இழுத்தடித்த மணியின் ஒலியில்
இனிய சுவாசம் கரைந்தே போனது
இன்மலர் முகங்களும் உதிர்ந்தே போனது
சிவ சக்தீ!!
பாரதிக்குப் பகர்ந்தாயா பதிலினை?
பரவாயில்லை,எனக்குச் சொல்லிடு
இறுகிய மனத்துடனே இளம் பிள்ளைகளைப்
பார்க்கும் மனம் தந்திடு!
சுற்றியிருக்கும் குப்பைக்கு நடுவில்
சுற்றுச் சூழல் மேம்பாடு சொல்லும்
சூட்சுமம் சொல்லிடு!
இளகிய மனம் இரும்பாக்கு!
நலம் கெடப் புழுதியில் எறிந்து விட்டாயே!
நலங் கெடப் புழுதியில் எறிந்து
விட்டாயே ! சிவ சக்தி
நீ தந்த சுடர் மிகு அறிவால் உலக
சூட்சுமம் உணர முடியவில்லையே!
மரபின் மைந்தன் சொன்னார்
சிறப்பான தலைமை உனக்கு
வாய்க்கப் பெறவில்லையென்றால்
அது துரதிர்ஷ்டமென்று!
பணிக்காலம் பலருக்கு
துரதிர்ஷ்டமே!
துரியோதன மனத்தின் விளைவா?
துர்மனத்தின் துன்பம்தரும் கலர்கண்ணாடியா?
மெத்தப் படித்த மேதாவித் தனத்தால்
மேலாண்மையை மேலாண்மை
செய்ய இயலவில்லை.
ஆண் தலைமை அரக்கத்தனமாய்,
பெண் தலைமையோ அசுரத் தனமாய்!
ஆசுவாசம் தேடி அடைக்கலமானேன்
வகுப்பறையில்!
எந்தன்
சுவாசத்திலே சுகந்தம்
மூச்சிலே உயிர்ப்பு
மலர்க்கூட்டம் எந்தன்
முன்னால்,
ஆஹா!
ஆசையாய்ப் பேசினேன் அதனிடத்தில்
அலுவலக அறையிலிருந்து அழைப்பாம்!
அய்ந்து நிமிடம் கூட ஆகவில்லை,
ஆறு மாதத்திற்கு முன் விட்டுப் போன கையெழுத்தாம்,
அரைகுறையாய் விட்டது தொடர்ந்தேன்
அடுத்த வகுப்புப் பிள்ளை வந்தாள்,
''அன்பரசியை அறிவியல் ஆசிரியை''கூப்பிடறாங்க,
''போ'' சொல்லிவிட்டுப் பாடத்துள் புக முயன்றேன்
''இழுப்பறையில் இங்கிலீஷ் நோட் இருக்கிறதாம்''
இளவரசி வந்து நின்றாள்
''இம்சை''என்றபடி கொடுத்துவிட்டு நிமிர்ந்தேன்
இழுத்தடித்த மணியின் ஒலியில்
இனிய சுவாசம் கரைந்தே போனது
இன்மலர் முகங்களும் உதிர்ந்தே போனது
சிவ சக்தீ!!
பாரதிக்குப் பகர்ந்தாயா பதிலினை?
பரவாயில்லை,எனக்குச் சொல்லிடு
இறுகிய மனத்துடனே இளம் பிள்ளைகளைப்
பார்க்கும் மனம் தந்திடு!
சுற்றியிருக்கும் குப்பைக்கு நடுவில்
சுற்றுச் சூழல் மேம்பாடு சொல்லும்
சூட்சுமம் சொல்லிடு!
இளகிய மனம் இரும்பாக்கு!
நலம் கெடப் புழுதியில் எறிந்து விட்டாயே!
Friday, March 9, 2012
Friday, March 2, 2012
சாதிசம யச்சழக்கின் சஞ்சலமும்;சச்சரவால்
மோதிமன மச்சுறலும்; முட்டாகும் -நீதிதனால்
ஆதிமொழி ஆழ்ந்திடலும் அற்றுவிழுந் தன்பிலோங்க
-புலவர்.பரமசிவம்.
ஓர்புவியில் ஈர்நிலையாம் ஒண்பகல்அல் நாள்நூறின்
சீர்தொடுக்கின் மூன்றுடன் சேர்;சீர்நாட்கைந்-தோர் மூன்றாம்
ஆர் பெருக்கல் செய்;உடன்எண் ஐந்தினைச் சேர்;புத்தாண்டே
பார் !தமிழ்நேர் !சீர்பகர்நல் வாழ்த்து!
-புலவர்.சி.பாண்டுரங்கன்.
Wednesday, January 18, 2012
சுய பார்வை
படித்ததில் பிடித்தது.
வா ,சகோதரி
இந்த
வார்த்தை வளையங்களை
விட்டு
வெளியே வருவோம் !
அதிகம் பேசுபவள் பெண்
என்று
அதிகம் பேசுபவரை
ஆச்சர்யப்படுத்துவோம் !
மென்மை என்ற
போர்வையை உதறி
மேன்மை என்னும்
உயரம் தீண்டுவோம் !
உதட்டுச் சாயம்
உயரச் செருப்பு
என்ற
அடையாளம் அழிப்போம்
நம் முதுகுக்குப் பின்னால்
வீசப் படுபவை
கத்திகள் அல்ல, வெறும்
காகித அம்புகளே!
கண்ணீரல்ல நம் ஆயுதம்
பெண்மையின் கம்பீரம்
நம்மிடம் இருக்கட்டும்
தாய்மையின் கனிவும்
தளராத உழைப்பும் !
எல்லோரிடமும் நட்பாயிருப்போம்
எல்லைகள் தாண்டினால்
எவரையும் மறுப்போம் !
நாம் குளிக்க அல்ல நெருப்பு
நம் விழிகளில் இருக்கட்டும்
அதன் இருப்பு !
வா ,சகோதரி
இந்த
வார்த்தை வளையங்களை
விட்டு
வெளியே வருவோம் !
அதிகம் பேசுபவள் பெண்
என்று
அதிகம் பேசுபவரை
ஆச்சர்யப்படுத்துவோம் !
மென்மை என்ற
போர்வையை உதறி
மேன்மை என்னும்
உயரம் தீண்டுவோம் !
உதட்டுச் சாயம்
உயரச் செருப்பு
என்ற
அடையாளம் அழிப்போம்
நம் முதுகுக்குப் பின்னால்
வீசப் படுபவை
கத்திகள் அல்ல, வெறும்
காகித அம்புகளே!
கண்ணீரல்ல நம் ஆயுதம்
பெண்மையின் கம்பீரம்
நம்மிடம் இருக்கட்டும்
தாய்மையின் கனிவும்
தளராத உழைப்பும் !
எல்லோரிடமும் நட்பாயிருப்போம்
எல்லைகள் தாண்டினால்
எவரையும் மறுப்போம் !
நாம் குளிக்க அல்ல நெருப்பு
நம் விழிகளில் இருக்கட்டும்
அதன் இருப்பு !
Subscribe to:
Posts (Atom)