Friday, November 26, 2010
படைப்புக் கடவுள்
பிரம்மனே,
கணிப்பொறி உண்டா
உன்னிடத்தில் ?
கணக்கற்ற உருவங்களை
உருவாக்கித் தருகிறாயே!
எத்தனை கோடி முகங்கள்-அதில்
எத்தனை கோடி அகங்கள் !
வடிவமைத்திடும் போது
வல்லவர்களையே ஆக்கு,
பிண்டங்களைப் பிடிக்கும்போது
தண்டங்களைத் தவிர்த்திடு
வாழ்வெனும் வரம்
வனப்பு மிகு கவிதை!
வரம் தருவாயோ ?
வாழ்வு மலர்த்துவாயோ?
வடிவமைக்கும் நீயே பொறுப்பு !
Thursday, November 25, 2010
மலர்
உலகின் அழகு
அனைத்தும் உன்னிலே!
திலகம் நீயே
மணத்திலும்,மரணத்திலும்!
கலக மனதிலும்
கனிவு தோற்றி
விலக வைப்பாய்
கடுமை தனை -மனதில்
விழிப்பு நிலை தந்து
களிப்பு தனைத் தருவாய்!
Wednesday, November 24, 2010
சொட்டு மருந்து
வாழ்வெனும் வானில்
சிறகடித்துப் பறக்க வேண்டாம்
நடக்கவாவது வேண்டுமல்லவா?
வாழ்வெனும் ஆழ்கடலில் நீந்தி
முத்தெடுக்க வேண்டாம்
குறைந்த பட்சம் மூழ்காதிருக்கலாம்!
சாதனையாளர் பட்டியலில்
சேர்ந்திடாவிடினும்,
சோதனைகளாவது வேண்டாம் !
வியப்புக் குறியாக மாறாவிடினும்
கேள்விக் குறியாக மாற வேண்டாம்
கேலிக்கு ஆளாக வேண்டாம்
ரோமியோவாய் வலம் வராவிடினும்
சாமியே என மூலையில் சாய
வேண்டாம்
போலியோ சொட்டு கொடுப்போம் !
பொன்னான வாழ்வு அமைப்போம் !!
Subscribe to:
Posts (Atom)