Wednesday, August 11, 2010
ஆற்றல் மிகு கவிஞன்
இயற்கையான ஆற்றலென்று
இன்னமுதக் கவி இயம்பிய பின்
பேர் அரசின் பெருமை பாடும்
பேறு உண்டா எனக்கு?
உந்தன் நூல்களை வாசிக்க,வாசிக்க
எந்தன் இதய வானில்-நாளும்
வைகறை மேகங்கள் தான்!
சகோதரா,உங்கள்
மௌனப்பூ பேசிய மழலை தான்
எந்நாளும் என்னுரைக்கு முன்னுரை!
கறுப்பு நிலாவைப் பாடாமல்-வகுப்பில்
கவிக்கோ இளங்கோவின் சிலம்பைச்
செப்பியதில்லை!
கற்பொன்றில் மட்டும் கண்ணகியைப்
போலிருங்கள்,
மற்றவற்றில் அந்த மடமகளை
மறந்திடுங்கள்.
வகுப்பறையில் பிள்ளைகளைக்
கூட்டாகச் சொல்லச் சொல்லி
குதூகலித்திருக்கிறேன்!
அலைகளை தகுந்த உரைகளாக்க
தங்க கவி மகன் உனையன்றி
தரணியிலே யாருண்டு?
ஊசியை ஒற்றுமையின் சின்னமாக்கிய
உன்னதக் கவியே!உயர்ந்தாய் நாளும் நீ,
எந்தன்
மகளின் மகனைக் கையிலெடுத்து
மகிழ்வோடு சொல்லுகின்றேன்-ஆம்
பருத்து விழுந்த பரிசுச் சீட்டே!
களஞ்சியம் எங்கள் கண்மணியும்,
கவிதையைப் போலவே!
மானுட சமுத்திரம் நானென்று கூவு
அடகிலிருந்து மீண்ட நாம்
அரசியலால் அடிமைப்பட்டிருக்கும்
மானுட சமுத்திரத்தின்
ஓர் துளி நான்!
சாதி,சமயச் சண்டைகளைச்
சகித்திடவே முடிந்திடாத
மானுட சமுத்திரத்தின்
ஓர் துளி நான்!
கையூட்டுக் கலாச்சாரத்தால்
கலங்கியே தவித்திடும்
மானுட சமுத்திரத்தின்
ஓர் துளி நான்!
கண்டங் கடந்து காசு காண
விழையும்-கவலையால் கரைந்திடும்
மானுட சமுத்திரத்தின்
ஓர் துளி நான்!
காப்பக கலாச்சாரத்தால்
கலங்கியே தவித்திடும்
மானுட சமுத்திரத்தின்
ஓர் துளி நான்!
குரல் கொடுக்கவே முடியாத
நிலையில்-கூவுவது எங்ஙனம்?
வன்மை தவிர்ப்போம்,
உண்மை வளர்ப்போம்,
நன்மை செய்வோம்,
தீமை களைவோம்,
அதன் பின்
உரத்த குரலில் கூவுவோம்,
உவகையோடு கூவுவோம்,
மானுட சமுத்திரத்தின்
ஓர் துளி நானென்று!
அரசியலால் அடிமைப்பட்டிருக்கும்
மானுட சமுத்திரத்தின்
ஓர் துளி நான்!
சாதி,சமயச் சண்டைகளைச்
சகித்திடவே முடிந்திடாத
மானுட சமுத்திரத்தின்
ஓர் துளி நான்!
கையூட்டுக் கலாச்சாரத்தால்
கலங்கியே தவித்திடும்
மானுட சமுத்திரத்தின்
ஓர் துளி நான்!
கண்டங் கடந்து காசு காண
விழையும்-கவலையால் கரைந்திடும்
மானுட சமுத்திரத்தின்
ஓர் துளி நான்!
காப்பக கலாச்சாரத்தால்
கலங்கியே தவித்திடும்
மானுட சமுத்திரத்தின்
ஓர் துளி நான்!
குரல் கொடுக்கவே முடியாத
நிலையில்-கூவுவது எங்ஙனம்?
வன்மை தவிர்ப்போம்,
உண்மை வளர்ப்போம்,
நன்மை செய்வோம்,
தீமை களைவோம்,
அதன் பின்
உரத்த குரலில் கூவுவோம்,
உவகையோடு கூவுவோம்,
மானுட சமுத்திரத்தின்
ஓர் துளி நானென்று!
Tuesday, August 10, 2010
அறிவியல் கவிஞன்
தமிழன்னையின் மணிமுடியில்
வைரம் நீ!
தமிழ் ஆழியில் அகப்பட்ட
கறுப்பு முத்து!!
தமிழ் வானின் வைகறை மேகமே,
வாழ்த்த வயதில்லை -வணங்கி
மகிழ்கின்றேன்!
போற்றிப் பாடும் புலமை இல்லை,
புகழ்ந்து நாளும் பாடுவேன்!
ஏற்றிப் பாடும் திறம் இல்லை,
என்றும் நலம் பாடுவேன்!
வார்த்தைக் காற்று மேகம்
வருடினால்,
வான் மழை பொழியாதே,
வர்(ரு)ணனை மழை!!
விசும்பின் துளி வீழட்டும்,
பசும் புல்லாய் தமிழிதயங்கள்
தளிர்க்கட்டும்!
வைரம் நீ!
தமிழ் ஆழியில் அகப்பட்ட
கறுப்பு முத்து!!
தமிழ் வானின் வைகறை மேகமே,
வாழ்த்த வயதில்லை -வணங்கி
மகிழ்கின்றேன்!
போற்றிப் பாடும் புலமை இல்லை,
புகழ்ந்து நாளும் பாடுவேன்!
ஏற்றிப் பாடும் திறம் இல்லை,
என்றும் நலம் பாடுவேன்!
வார்த்தைக் காற்று மேகம்
வருடினால்,
வான் மழை பொழியாதே,
வர்(ரு)ணனை மழை!!
விசும்பின் துளி வீழட்டும்,
பசும் புல்லாய் தமிழிதயங்கள்
தளிர்க்கட்டும்!
ஆற்றல் மிகு தலைவர்
அணு விஞ்ஞானியே,
ஆற்றல் படைத்தோனே,
இனிய பாரதம் காக்க,
ஈகையாய் வந்தோனே,
உன்மத்தமானவனே,
ஊர் போற்றும் உத்தமனே,
ஐயா,நீவீர் வாழ்க!
எளிமையின் வடிவே,
ஏற்றம் கொண்டவரே,
முடித் திருத்தம் தேவையில்லை,
நாட்டின்
முகத் திருத்தம் செய்வதற்கு
சிதம்பர ரகசியமில்லை-உமது
நீல வண்ணம் -ஆனால்
சிதம்பர ரகசியமே!
மனிதனே -நல் மனம்
படைத்தோனே!
மரைக்காயர் மைந்தனே
மண்ணெல்லாம் மணம்-உன்னாலே!
அண்ணல் இராமனைப் போல்
அமைதியாய்க் கடல்!
நீரும் அமைதிக் கடல் தான்
குணத்திலே அமைதியாய்!
மனத்திலே கடலாய்!!
இராமேஸ்வரம் புனிதம் பெற்றது
இன்னொரு முறை!!
ஆற்றல் படைத்தோனே,
இனிய பாரதம் காக்க,
ஈகையாய் வந்தோனே,
உன்மத்தமானவனே,
ஊர் போற்றும் உத்தமனே,
ஐயா,நீவீர் வாழ்க!
எளிமையின் வடிவே,
ஏற்றம் கொண்டவரே,
முடித் திருத்தம் தேவையில்லை,
நாட்டின்
முகத் திருத்தம் செய்வதற்கு
சிதம்பர ரகசியமில்லை-உமது
நீல வண்ணம் -ஆனால்
சிதம்பர ரகசியமே!
மனிதனே -நல் மனம்
படைத்தோனே!
மரைக்காயர் மைந்தனே
மண்ணெல்லாம் மணம்-உன்னாலே!
அண்ணல் இராமனைப் போல்
அமைதியாய்க் கடல்!
நீரும் அமைதிக் கடல் தான்
குணத்திலே அமைதியாய்!
மனத்திலே கடலாய்!!
இராமேஸ்வரம் புனிதம் பெற்றது
இன்னொரு முறை!!
Monday, August 9, 2010
எரியும் வயிறும்,எரியாத அடுப்பும்
எரியாத அடுப்புக்கு ஒரே காரணம்
வாட்டிடும் வறுமை!
எரியும் வயிறுகளுக்கோ
எண்ணற்ற காரணங்கள்!
அடுத்தவனின் ஆக்கம் கண்டு
அடுப்பின் ஜூவாலையாய் சில வயிறு
அதிகமாய் உண்டு விட்டு
அவதியுறும் வயிறுகள் சில
அரை வயிறும் நிரம்பாமல்
அல்ல்லுறும் வயிறுகள் பலப்பல
அதிகம் அரைகுறையை நிரப்பினால்
அவ்விரு எரிச்சலுமே அணையும்!
அக அழுக்கு அகற்றப் பட்டாலொழிய
அடுப்பின் ஜீவாலை அணைய
வழியேயில்லை!!
வாட்டிடும் வறுமை!
எரியும் வயிறுகளுக்கோ
எண்ணற்ற காரணங்கள்!
அடுத்தவனின் ஆக்கம் கண்டு
அடுப்பின் ஜூவாலையாய் சில வயிறு
அதிகமாய் உண்டு விட்டு
அவதியுறும் வயிறுகள் சில
அரை வயிறும் நிரம்பாமல்
அல்ல்லுறும் வயிறுகள் பலப்பல
அதிகம் அரைகுறையை நிரப்பினால்
அவ்விரு எரிச்சலுமே அணையும்!
அக அழுக்கு அகற்றப் பட்டாலொழிய
அடுப்பின் ஜீவாலை அணைய
வழியேயில்லை!!
தொ(ல்)லை பேசி
அம்பானிக்கோர் அழைப்பு
வீடு கட்ட கடன் தருவதாக
விந்தையாய் இருக்கிறது,
விடை கிடைக்கவில்லை
அலுவலகம் செல்லும் போது
அவசரமாய் ஓர் அழைப்பு!
பதட்டமாய் ஓடுகிறீர்களா?
நிதானமாய் இந்தப் பாட்டைக் கேளுங்க
கேள்வி கேட்பாரில்லை,
அயல்நாட்டில் இருக்கும் மகனின்
அழைப்புக்காக மட்டுமே அலையில் பேசும்
அலமுப்பாட்டிக்கும் ஓர் அழைப்பு!
நீங்க யாரையாவது காதலிக்கிறீங்களா?
நடவடிக்கை எடுக்க முடியுமா?
தங்கையாக்களுக்கு தவறுதல் அழைப்பு
வந்தாலென்ன?பரவாயில்லை
வெங்கையாக்களின் விண்ணப்பங்கள்
நிறைவேற்றப் பட்டால் சரி!
நல்லவேளை!
நிதி அமைச்சருக்கு வந்துவிட்டது
தவறுதல் அழைப்பு!
நீதி கிடைத்து விட்டது!!
வீடு கட்ட கடன் தருவதாக
விந்தையாய் இருக்கிறது,
விடை கிடைக்கவில்லை
அலுவலகம் செல்லும் போது
அவசரமாய் ஓர் அழைப்பு!
பதட்டமாய் ஓடுகிறீர்களா?
நிதானமாய் இந்தப் பாட்டைக் கேளுங்க
கேள்வி கேட்பாரில்லை,
அயல்நாட்டில் இருக்கும் மகனின்
அழைப்புக்காக மட்டுமே அலையில் பேசும்
அலமுப்பாட்டிக்கும் ஓர் அழைப்பு!
நீங்க யாரையாவது காதலிக்கிறீங்களா?
நடவடிக்கை எடுக்க முடியுமா?
தங்கையாக்களுக்கு தவறுதல் அழைப்பு
வந்தாலென்ன?பரவாயில்லை
வெங்கையாக்களின் விண்ணப்பங்கள்
நிறைவேற்றப் பட்டால் சரி!
நல்லவேளை!
நிதி அமைச்சருக்கு வந்துவிட்டது
தவறுதல் அழைப்பு!
நீதி கிடைத்து விட்டது!!
Subscribe to:
Posts (Atom)