Tuesday, September 20, 2011

வேலைக் கோட்பாடு


மார்க்ஸின் மூன்றாவது கருத்து இது.இதனைப் புரிந்து கொள்வதன் மூலம் சுவாமி விவேகானந்தரின் வேலைக்கோட்பாட்டின் பல ஆழமான பரிமாணங்களை அறிந்து கொள்ளலாம்.
வேலை என்பது சம்பாதிப்பதற்கான ஒரு வழி, புற வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான ஒரு வழி என்ற கண்ணோட்டத்திலேயே பல சிந்தனையாளர்கள் பார்க்கின்றனர்.ஆனால் மார்க்ஸ் அதன் மன இயல் பரிமாணத்தில் கவனம் வைத்தார்.வேலை என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்,மனிதனின் அக வெளிப்பாடு அது என்று கண்டார் அவர்.வேலையின் வாயிலாக அகத்திலுள்ள படைப்பாற்றல் வெளிப்பட,வெளிப்பட அந்த வேலையே மனிதனில் அக மாற்றங்களை ஏற்படுத்துகிறது.வேலையின் மூலம் அகத்திலுள்ள தெய்வீகம் வெளிப்படுவது பற்றி விவேகானந்தரும் பேசுகிறார்.எனவே இந்த விஷயத்தில் மார்க்ஸீம்,விவேகானந்தரும் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்கிறார்கள்.