வற்றாத நதி பாயும் மண்ணில்
வறண்டு கிடக்குதொரு பகுதி
வாழ வழியில்லா மனிதனோடு
வாயில்லா ஜீவனும் வாடுது
வழி நாமும் காண்பதெவ்வாறு?
வாய்க்கால் வழியோடினால்
புல்லுக்கேனும் பொசியட்டும்.
நதி நீர் இணைப்பே,
வறட்சி ஓட்டும்,
வறுமை தீர்க்கும்,
நிலம் செழிக்கும்,
வளம் கொழிக்கும்.