Monday, September 13, 2010

ஆட்சி மொழியில் தமிழ்

                       அமுதே  தமிழே, அழகிய  மொழியே
                       எனதுயிரே,சுகம்  தரும்  கவிதைகள்  தா!

                      அன்னையே!தமிழன்னையே ,
                      ஆட்சி  பீடத்தில்  அமர்ந்திட்டு
                      ஆண்டுகள்  ஐம்பது  கண்டாய்
                       ஆற்றல்  தந்து   நின்றாய்!

                      சுந்தரத் தமிழே உனை   வணங்குகிறேன்
                     சுவையோடு சுகமாய்  என்னுள் வாழ்ந்திடு!
                     தரம்  நிறை  தமிழே!தண்டமிழ்க் கவியாகும்
                    வரம்  எனக்குத் தந்திடு!சிரம் தாழ்த்துகின்றேன்!

                    ஆட்சியில்  அமர்ந்தே  ஐம்பதாண்டுகள்-உந்தன்
                    ஆதியோ  ஆயிரமாயிரம்  ஆண்டுகள் !!
                    வாழ்த்த  வார்த்தை இல்லை ,வணங்கிப்  பா
                    பாடுகின்றேன் !வணங்கா முடி  உனக்கு.