அமுதே தமிழே, அழகிய மொழியே
எனதுயிரே,சுகம் தரும் கவிதைகள் தா!
அன்னையே!தமிழன்னையே ,
ஆட்சி பீடத்தில் அமர்ந்திட்டு
ஆண்டுகள் ஐம்பது கண்டாய்
ஆற்றல் தந்து நின்றாய்!
சுந்தரத் தமிழே உனை வணங்குகிறேன்
சுவையோடு சுகமாய் என்னுள் வாழ்ந்திடு!
தரம் நிறை தமிழே!தண்டமிழ்க் கவியாகும்
வரம் எனக்குத் தந்திடு!சிரம் தாழ்த்துகின்றேன்!
ஆட்சியில் அமர்ந்தே ஐம்பதாண்டுகள்-உந்தன்
ஆதியோ ஆயிரமாயிரம் ஆண்டுகள் !!
வாழ்த்த வார்த்தை இல்லை ,வணங்கிப் பா
பாடுகின்றேன் !வணங்கா முடி உனக்கு.