Saturday, February 26, 2011
கம்பீரம்
காட்டுக்குக் கம்பீரம்
காட்டரசன் கர்ஜனை
நாட்டுக்குக் கம்பீரம்
நல்லதொரு ஆட்சி
வீட்டுக்குக் கம்பீரம்
விளக்கேற்ற வந்தவளாலே
வந்தவளின் பெருமிதம்
வாய்த்தவளின் கம்பீரத்தாலே!
வாய்த்தவனின் கம்பீரம்
வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பதாலே!
வளமான வாழ்க்கையே
சமுதாயத்தின் கம்பீரம்
சமுதாயச் செழிப்பே
நாட்டுக்குக் கம்பீரம்
ஔவை சொன்ன குடிஉயரக்
கோன் உயர்தல் போலே
ஒன்றன் கம்பீரம்தான்
மற்றதற்கு அடித்தளம்
அடித்தள பலத்தால்
அ.ழகான இல்லமமையும்
அழகிய இல்லத்தின் தேவை
அன்பான உள்ளமே!
Subscribe to:
Posts (Atom)