Monday, November 29, 2010
பொழுது புலர்கிறது
நீல வானின் அடிவயிற்றில்
செந்நிற மேகச் சிதறல்
புறப்படுகிறது புத்தொளியுடன்
சூரியக் குழந்தை!
பொழுது புலர்கிறது,
புலர்ந்த பொழுது மலர்கிறது,
மலரின் மணமாய்,
பறவையின் பூபாளமாய்,
பூங்காற்றின் வருடலாய்,
பொழுது புலர்கிறது !!!
இன்பம் தரும் இயற்கையை
இதமாய் நுகரும் வேளையிலே
இதயத்தில் நெருடலாய்.....
இனிமை மறைகிறது,இன்னல்
விளைகிறது.
பொழுது புலர்கிறது,
செந்நிற மேகத்தையும்
சிதறடிக்கும் கரிப்புகையாய்,
ஆலையின் கழிவுகளாய்,
ஆழியில் அமிழும்
ஆண்டவனாலும் கூட,
புலர்ந்த பொழுதினிலும்
எங்கும் இருளே! எதிலும் இருளே!
சத்தம் சூழ் உலகினிலே
சுத்தமும் பேணுவோம்!
அசுத்தத்தால்,
சாக்காட்டில் சாயும் அவனியை
பூக்காடாக்குவோம்.
விஞ்ஞான உலகினிலே
அஞ்ஞான இருளகற்றி
மெய்ஞான விளக்கற்றுவோம்!
இருள் அகலும்,இதயத்திலிருந்தும்
பொழுது புலரும்,எங்கும்
ஆனந்தம் மலரும்.
Subscribe to:
Posts (Atom)