தேர்வு எழுதிடச்
செல்ல வேண்டும்
மனித உணர்வு
தேறாத இடத்தில்
படித்த்தைத் தாளில்
இறக்க வேண்டும்
மடிந்த்து மயானத்தில்
இறங்கிக் கொண்டிருக்கிறது
கலைமகளின் அருளுக்காக
திருமகளையும் விலையாக்கி
கழகங்களின் கலகங்களால்
இருமகளும் இழப்பு
காகிதம் கனமாக்குவதைத் தவிர
கவிஞனால் என்ன செய்ய முடியும்?
அறிக்கை விட மட்டுமே முடியும்
அரசியல்வாதிகளால்!
பத்திரிகைகளுக்கு வெறும்
தலைப்புச் செய்திகளாய்!
கலக்கத்தின் உச்சத்தில்
காவலும் கூட!
எண்ணி எண்ணித் தவிப்பது
தவிர ஏதும் செய்ய இயலாதோராய்
பொதுஜனங்கள்!
தீர்வு?
( தேர்வு நேரத்தில் நடந்த கலவரத்தின் போது எழுதியது)
Friday, July 30, 2010
Wednesday, July 28, 2010
கரை சேரா வைகை நதி
பாரம் சுமந்திடவே
பாலத்தின் அடியினிலே
பதுங்கிக் கிடந்திடும்
பக்குவம் பெற்ற ஆறு
அணையின் கட்டினிலே
அடங்கிக் கிடந்திட்டு
அகத்தை அடக்கிடும்
அனுபவம் பெற்ற ஆறு
காசில்லாக் காரணத்தால்
காலங்கள் கடந்திடினும்
கரையைச் சேர்ந்திடாது
காத்திருக்கும் கன்னி ஆறு
கரை சேராமலிருப்பது
வைகை மட்டுமல்ல
வாழ்வு தேடும் பல
வாலிப உள்ளங்களும்!
பாலத்தின் அடியினிலே
பதுங்கிக் கிடந்திடும்
பக்குவம் பெற்ற ஆறு
அணையின் கட்டினிலே
அடங்கிக் கிடந்திட்டு
அகத்தை அடக்கிடும்
அனுபவம் பெற்ற ஆறு
காசில்லாக் காரணத்தால்
காலங்கள் கடந்திடினும்
கரையைச் சேர்ந்திடாது
காத்திருக்கும் கன்னி ஆறு
கரை சேராமலிருப்பது
வைகை மட்டுமல்ல
வாழ்வு தேடும் பல
வாலிப உள்ளங்களும்!
Subscribe to:
Posts (Atom)