Monday, October 3, 2011

மனித நலப்பொருளாதாரம்

நவீன பொருளாதாரச் சிந்தனைகளின் ஒரு பிரிவே மனிதநலப் பொருளாதாரம்.
விவேகானந்தரின் பொருளாதாரச் சிந்தனைகள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவை.

அமர்த்ய செனின் மனிதநலப் பொருளாதாரம்(welfare economics)
தங்கள் தலையெழுத்தை மாற்றிக் கொள்வதில் ஏழைகளுக்குச் சிறிதும் சுதந்திரமே இல்லை என்பதை அவர்களுடன் நாம் பழகும்போது தான் புரிந்து கொள்ள முடியும்.
'திறமைகளை வெளிப்படுத்த முடியாத நிலை தான் வறுமை'என்று கூறுகிறார் அமர்த்ய சென்.மக்களை மென்மேலும் திறமைகளை வெளிப்படுத்துமாறு செய்வது தான் வறுமையைப் போக்குவதற்கான சிறந்த வழி.
திறமைகளை வெளிப்படுத்த முடியாததால் தான் வறுமை தொடர்கிறது.இந்தியாவின் ஏழைகள் இந்தச் சுழியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
செய்யும் தொழிலே தெய்வம்-கொண்ட
திறமை தான் நமது செல்வம்.