புதுக் கவிதை
‘’ இனியொரு விதி செய்வோம்’’
செய்தாயிற்று,
இலக்கணம் வகுத்து
இலக்கியம் படைப்போம்
படைத்தாயிற்று.
படைத்த இலக்கியம்
செய்த விதி
பிழையென்றானது.
இலக்கண மரபு மீறல் ,
பிழையென்ற கொள்ளலாகாது
இலக்கியமில்லையென்றும்
தள்ளலாகாது,
புதுக்கவிதை எனவும்
புரிந்து கொள்ளலாம்.