நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Wednesday, April 20, 2011
உணவே மருந்து
உணவே மருந்து
ஆம் ! மருந்தே உணவு
வண்ண வண்ண மாத்திரையாய்
மட்டுமல்ல,
வகை வகையான காய்கறியாய் !
வனப்பான புட்டியில் கோக்காய் !
வண்ண வண்ண வடிவினில் கேக்காய் !
இயற்கை அழகு
காலை வானத்தின்
ஆரஞ்சுக் கதிர் அழகு ,
மாலை வானத்தின்
மங்கிய நிலவொளியும் அழகு ,
பகல் நேரப் பொழுதின்
பரிபூரண வெளிச்சம் அழகு ,
இரவு நேரப் பொழுதின்
இதம் தரும் தென்றலும் சுகம்.
மழலை
மகரந்தமே
மலர்ப் பந்தாய் ! மழலை!!
வதந்தி
கோஹினூர் கிடைத்ததாலே
கரிக் கொட்டைகளின்
விமர்சனங்களால்
கலக்கமுறுவதில்லை-ஆனால்
கவலையுறுகிறது மனம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)