நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Tuesday, April 3, 2012
அதியமான் ஔவைக்குத் தந்த
அதிசயக் கனியே,
அறுசுவையில் ஒரு சுவையே!
அருமருந்தே,இளமைக்கு விருந்தே!
ஆப்பிளின் மாற்றாம் உன்னில்
ஆயிரமாயிரம் உயிர்ச்சத்து!
கசப்புச் சுவை கடக்க நீரைக்
குடித்தால், இனிப்பு !
வாழ்வின் விளக்கமன்றோ நீ?
Monday, April 2, 2012
தட்டாமலே.......
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
இது இயேசு பிரானின்
இனிய வாசகம்-ஆ.னால்
தட்டாமலே திறக்கப்படும்
நல்லோரின் மனக்கதவுகள்
கேளாமலே கொடுத்திடும்
அவர்தம் திருக்கரங்கள்
வல்லான் பொருள் குவிக்கும்
தனிஉடமை -நீங்கி
வரவேண்டும் திருநாட்டில்
பொது உடமை!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)