Wednesday, August 3, 2011

மனிதத் தேவை

சுவரை   நிமிர்த்திட  -இவள்
வளைகிறாள்-வாழ்வை
வளைக்கின்றாள்!

உறைவிடம்   உருவாக்கி
உணவு ,உடை    உண்டாக்குவாளா?
உயிர்  உருக்கி ,உழைப்பு   பெருக்கி
உயர்வு   பெறாவிடினும்
உலகின்  மாறாத  மனிதத்  தேவை
உணவு ,உடை ,உறைவிடம்
பெறுவாளா?