நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Thursday, April 7, 2011
நீக்கல்
கல்லானாலும் சரி,
புல்லானாலும் சரி,
வேண்டாத பகுதிகளை
நீக்க,நீக்க சிற்பம்
அகப்படும்!
அகமும் வசப்படும்
ஆகாததை நீக்க!!
Wednesday, April 6, 2011
மலர்ந்த மனம்
உலர்ந்த உள்ளம்
உவகை கொள்ளாது
உலகையே கொல்லும்
தளர்ந்த நெஞ்சம்
தாழ்வுற்றே வாடி,
தகாததைச் செய்யும்
மலர்ந்த மனமே
மகிழ்வால் என்றும்
மகத்துவமே செய்யும்
உயர்ந்த உள்ளம்
உவப்பாலே என்றும்
உலகையே வெல்லும்
அன்பான அகங்கள்
அல்லதை விடுத்து
நல்லதையே செய்யும்
கனிவான உள்ளம்
காலம் கடந்து
காசினியை வெல்லும்!
Tuesday, April 5, 2011
வரமா?சாபமா?
பணி புரிதல் பெண்களுக்கு
வரமா?சாபமா?
பட்டி மண்டபத் தலைப்பு
போலுள்ளதா?
வாழ்வுப் பாதையை
வளமாக்கிட வரம்!
வந்த இடத்திலே சங்கடம்
வந்தால் சாபம் !
Monday, April 4, 2011
ஆழ்துளைக் கிணறு
பூமித்தாயின் ஓலம் காதுகளிலே
கனத்த சத்தமாய்!
அவளின் நெஞ்சக் குமுறல்
நெடிய புகையாய் !
அவள் அழுத கண்ணீரோ
சிறு ,சிறு துளிகளாய் மட்டும் !!
பொறுமையின் இலக்கணமே,
பொங்கி விடுகிறாயே-நீயும்
பூகம்பமாய் !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)