Sunday, June 5, 2011

உயிர்களிடத்தில் அன்பு வேணும்


                                    அழகிய  வீடு.  பின்புறம்  ஒரு   அற்புதத்  தோட்டம்   அமைத்திருந்தார்  முத்தண்ணா.முத்தண்ணா  ஜெயராஜ்  வீட்டின்  தோட்டக்காரர்.
மாலை நேரம்  ஜெயராஜ்  வீட்டுத்  தோட்டத்தைச் சுற்றி  வந்து  கொண்டிருந்த  பொழுது  மரத்தின்  மீது  கூடிருப்பதைக்  கண்டார்.
                                                            அவர்   பார்த்த  அந்த   சமயத்தில்   தாய்ப்பறவை   குஞ்சுகளுக்கு  இரை   ஊட்டிக் கொண்டு  இருந்தது.பாரதிதாசனின்  ''குஞ்சின்   குடல்    நிரப்பும் '' என்ற    வரிகள்  தான்   மனதில்    ஊடாடியது.அந்தப் பறவை  வாய்  திறந்திருந்த   அழகு    மழைநீரை  நாடும்   மலரைப்  போலவும்,மழையை அருந்தும்  சாதகப் பறவை  வாய்   திறந்து  சாதகம்    செய்வதாகவும்    ரசனையோடு  கூடிய  சிந்தனைகள்   மனதில்   ஒன்றன் பின்  ஒன்றாய்     வந்து  போனது.
                                                         முத்தண்ணாவை    அழைத்தார்     ஜெயராஜ்.செடிகளுக்கு   நீர்     வார்த்துக்  கொண்டிருந்த  அவர்    வேகமாக   ஓடி வந்தார்.கூட்டினைக்  காண்பித்த   அவரிடம்   முத்தண்ணா   வேகமாக   ,''நானும்   பார்த்தேன் ஐயா,இன்றே  கலைத்து   எறிந்து விடுகிறேன் '' என்றார்.
அதற்கு   ஜெயராஜ்,முத்து! கலைக்காமல்   இருப்பது   மட்டுமல்ல.முடிந்தால்  பத்திரமாகப்  பார்த்துக் கொள்.உரிய  பருவம்   வந்ததும்   தானாகப்   பறந்திடட்டும்   என்றார்.முத்தண்ணாவும்,சரி  ஐயா   என்றார்.
''உயிர்களிடத்தில்    அன்பு   வேணும்''   பாரதியின்  வரிகளைப்  படம் பிடித்துக்  காட்டுவதாயிருந்தது  ஜெயராஜின்  செய்கை.