ஆன்மீக வாழ்வு தன்னில்
ஆனந்தித்திருக்கும் நாள்
எல்லாம் நல்ல நாளே!
இயற்கையோடு இயைந்து
இன்புற்றிருக்கும் நாள்
எல்லாம் நல்ல நாளே!
அன்பு கெழுமிய வாழ்வு தனில்
அக்கறை கொள்ளும் நாள்
எல்லாம் நல்ல நாளே!
எல்லையற்று விரிந்த உலகில்
எல்லாமாய் இருப்பதனை வணங்கும்
நாள்
எல்லாம் நல்ல நாளே!
அஷ்டமியாலும் அசையாது
நவமியாலும் நலியாது
நாளெல்லாம் நலம் காண
நம்பிடுவோம் இறைநிலையை
நாடிடுவோம் நல்லறத்தை!
எண்கள் நமது கண்களாமே!
இருந்தாலென்ன?
இராகு,கேது கிரக நிலை
வந்தாலென்ன?
இயற்கையின் சுழற்சியில்
எல்லாமே இருந்திடுமே,
இறை நிலை பற்றுவோம்,
இழி நிலை அகற்றுவோம்!