வாழும் நாளிலே
வளமாயிருந்தால்
வாழ்வு சொர்க்கம்
வளம் குன்றிப் போனால்
அதுவே நரகம்.
வளமென்பது,
பொருள் வளமட்டுமல்ல,
மன வளம்,ஆன்ம நலம்
மன நலமே ஆன்ம பலம்
அன்பிலே அடித்தளமிட்ட ஆன்மா
ஆயுட்காலத்திலே அனுபவிக்கும்
சொர்க்கம்!
அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை
நாளும் நரகமே.