Sunday, June 27, 2010

செம்மொழியான தமிழ்மொழி

ஊர் கூடி இழுத்த தமிழ்ப்பூந்தேர்
கொங்கு மண்டலம் முழுதுவதும்
மணம் பரப்பியது-இது
குவலயம் எங்கும் தொடர்ந்து மணக்கும்

எட்டுத் திக்கும் சென்று வந்த தமிழர்கள்
கொண்டு வந்த கலைச்செல்வங்களால்
தமிழன்னை வளமும்,நலமும் பெற்றாள்
செம்மொழி பாரெங்கும் பவனி வருகிறது

மாநாடு கண்டு மலைப்பு
அரங்கு கண்டு வியப்பு-அனைத்தும்
காண முடியாமல் தவிப்பு-இணைய
மாநாடு கண்டது பூரிப்பு

கவியரங்கமும்,பட்டிமண்டபமும்,சொற்பொழிவும்
சிந்தையெல்லாம் குளிர்ந்து போனது
உலகோர் போற்றிய உன்னத தமிழே
உயர்வாய் உலகோர் உய்யவே!
வாழ்வாய் யாம் வாழவே!

No comments: