Friday, October 1, 2010

அகத் தூய்மை

சூத்திரங்களால்   மனதைச்
சுத்தப்படுத்தி விட  முடியாது

அறிவியல்  ஆய்வினால்
அகத்தை  அழகாக்க முடியாது

அறிவை  மேம்படுத்த  இவை
யாவும்   அவசியமே!

அகத்தை  மேம்படுத்த
அழகாய்ச்  சமைத்த
அற்புதக்  கவிதைகளும்
அறத்தை  வலியுறுத்தும்
ஆன்மீக  கதைகளுமே
அவசியத்  தேவை ,மட்டுமல்ல
அத்தியாவசியத் தேவையுமே .

No comments: