Saturday, October 16, 2010

வன்முறை வலி

ஈழத்திலே   சண்டையிட்டால்   -எம்
மனசு   வலிக்குது
ஈராக்கிலே  யுத்தமென்றால்  -எம்
மனசு   துடிக்குது

காசுமீர   பூமியும் தான்
கதி கலங்கு நிக்குது
கத்திச்சண்டை போட்டா நாம
காசுமீரத்தை  மீட்பது?

இரட்டைக் கோபுரம்  இடிபட்டாலும்
எட்டி நின்றா  பார்ப்பது?
தட்டுக் கெட்ட  மனிதக் கூட்டம்
தறி கெட்டுத் தான்  நடக்குது

மும்பையிலே  குண்டு வைச்சு
வம்பு  செய்யும்  வன்முறை
நம்பி நம்மை வந்த அயல்நாட்டவரும்
வெம்புது -தம்பி  இதைக்
கேட்டு  நாளும்
தர்க்கமெல்லாம்  தள்ளி வை-மனித
வர்க்கமெல்லாம்  உயர்ந்திடவே
வன்முறைக்குக்  கொள்ளி வை.

No comments: