மனித மொட்டே!
மனம் தொட்டே
மலர்த்தும் பட்டே!
மடியிலே மகிழ்வோடு
மயங்கிடுவாய்!தாலே!
தாலேலோ!!
பிஞ்சே! பித்தம் தீர்க்கும்
நல் மருந்தே!
அஞ்சுகமே!அகமலர்த்தும்
அருமருந்தே!
அன்பெனும் தொட்டிலிலே
அமைதி கொள்வாய்!தாலே
தாலேலோ!!
நெஞ்சம் நெகிழ்த்தும்
பஞ்சுப் பொதியே !
வாழ்வின் பற்றுக் கொடியே !
வளம் தரு கற்பகமே,
கற்கண்டே !கனி ரசமே !
கண்ணுறங்கு !தாலே !
தாலேலோ !
மனம் தொட்டே
மலர்த்தும் பட்டே!
மடியிலே மகிழ்வோடு
மயங்கிடுவாய்!தாலே!
தாலேலோ!!
பிஞ்சே! பித்தம் தீர்க்கும்
நல் மருந்தே!
அஞ்சுகமே!அகமலர்த்தும்
அருமருந்தே!
அன்பெனும் தொட்டிலிலே
அமைதி கொள்வாய்!தாலே
தாலேலோ!!
நெஞ்சம் நெகிழ்த்தும்
பஞ்சுப் பொதியே !
வாழ்வின் பற்றுக் கொடியே !
வளம் தரு கற்பகமே,
கற்கண்டே !கனி ரசமே !
கண்ணுறங்கு !தாலே !
தாலேலோ !
No comments:
Post a Comment