மாயை இவ்வுலகு,
மாய்வது உறுதி,
மன ஆசைகள் மாயாததேன்?
இன்னல்கள் நிறைந்ததிவ்வுலகு
இறப்பென்பது உறுதி,
இன்பத்தையே மனம் நாடுவதேன்?
சத்தங்கள் நிறைந்ததிவ்வுலகு
சாக்காடென்பது உறுதி-மனச்
சந்தடிகள் ஓயாததேன்?
ஆடம்பரம் இவ்வகிலம்
ஆட்டம் ஓய்வது உறுதி
ஆகாயம் முட்டும் ஆசைகள்
பிறப்பதேன்?
மனம் ஒரு?
No comments:
Post a Comment