Sunday, June 19, 2011

வண்டுதிர்க்கும் பூக்கள்


                                பூவுக்குள்ளே   பூவையே  தேடுகிறாயா?
                                பொன்  வண்டே !
                                ஒட்டிய  மகரந்தம்   உதிர்த்தே
                                இன்னொரு  பூ  தருவாயோ?

                                பூவாகிக், காயாகிக் ,கனியாக்கும்
                                பூரணத்துவம்  தொடர்கிறாயா?
                                பூவுலகு  அழகின்  பூரணம்
                                பூவையுலகு  உலகின்  பூரணம்

                               வண்டுதிர்க்கும்  மகரந்தம்
                               மலராய்  மலர்கிறது
                                வாழ்வு   தந்திடும்  பூரணம்
                               மழலையில்  மிளிர்கிறது

                              கனியின்  தொடர்ச்சி
                              மலர்களின்  மலர்ச்சி
                              குவலயத்தின்  தொடர்ச்சி
                               குழந்தையின்  வளர்ச்சி

                              வண்டுதிர்க்கும்  பூவே-நீ
                               மலரா?மழலையா?
                                                                               

2 comments:

Yaathoramani.blogspot.com said...

பூர்ணத்தை பிரித்தாலும் பிரிந்ததும் பூரணமே
மீதம் இருப்பதுவும் பூரணமே என்கிற
உயரிய தத்துவதை ஒரு வரியில்
பூவை (மங்கையர்) உலகு உலகின் பூரணம் என
பெண்கள் குறித்து மிக அழகாகசொல்லிப்போகிறீர்கள்
நல்ல தரமான பதிவுதொடர வாழ்த்துக்கள்

Murugeswari Rajavel said...

நன்றி ரமணி சார்