Thursday, August 11, 2011

வளைதல்


வளைந்தால் மட்டுமே வாழ்வா ?
வசதிக்காக வளைவது என்பதும்
வன்முறை ஆகாதா?

தலையே இல்லா உடலை நாமும்
என்னவென்று சொல்வோம்?
புதுத்தலை பொருத்தி இயங்கும் வாழ்வு
புனரமைக்கப் படுமா?

மூளை இட்டிடும் கட்டளையால் தான்
முழு உடலும் இயங்கும்
மூளையின் கட்டளை தவறென்றானால்
முறையற்றே மயங்கும்.

மயங்கிய தன்மையாயிருந்தாலும் கூட
இயக்கம் என்பதிருக்கும்
இயக்கம் என்பது இருப்பதனாலே
இளக்கம் வந்திடுமா?

இளக்கமில்லா இறுக்கமென்பது
இயந்திரமாகாதா?

மயக்கமும்,இறுக்கமும் கொண்ட மனது
மதி கெட்டே மாயும்
மதி கெட்டே மயங்கிய மனது
சதி மட்டும் புரியும்

விதியால் விளக்கிட முடியாததற்கு
விலக்கம் ஒன்றே தீர்வு.

2 comments:

Chitra said...

காரசாரமான கவிதை.

Murugeswari Rajavel said...

உங்களைப் போல் சிரியஸ் பார்வை பார்க்காததன் விளைவு சித்ரா.உங்கள் வலைப்பூ படிக்கும்போது மனசு எத்தனை லேசாகிவிடுகிறது.