Monday, September 5, 2011

ஆசிரியர் தினம்

ஆசிரியத் தொழில் -ஆஹா
எத்துணை அழகானது?
தொழிலா இது?- இல்லை

தவம் ,தியானம், யோகம்

ஆசிரியரைப் பார்க்கையிலே
அகம் மகிழ்கிறதென்றால்
ஆசிரியராய் நிற்கையிலும்
அகம் குளிர்கின்றதே

ஏறி வந்த ஏணியினை
எண்ணிப் பார்ப்பதொரு சுகம்
ஏணியாய் நிற்பது கூட
எந்நாளும் சுகமே....

2 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆசிரியர் தின கவிதை சுருக்கமாக இருந்தாலும்
மிக மிக அற்புதம்.தொடர்ந்து வாரம் ஒரு படைப்பாவது
தருவதை ஒரு தீர்மானமாக இந்தத் தினத்தில் கொள்ளலாமே?
படைப்புத் திறனிருந்தும் பதிவுகள் தராதிருப்பது
விதை நெல்லை வீட்டில் வைத்திருந்தும்
விதைக்காது இருத்தல் போலாகாதா?
தரமான பதிவைத் தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Murugeswari Rajavel said...

நன்றி ரமணி சார்.