Friday, March 2, 2012

சாதிசம யச்சழக்கின் சஞ்சலமும்;சச்சரவால்
மோதிமன மச்சுறலும்; முட்டாகும் -நீதிதனால்
ஆதிமொழி  ஆழ்ந்திடலும் அற்றுவிழுந் தன்பிலோங்க
வாதிரிவாம் புத்தாண்டே வா.


                                                    -புலவர்.பரமசிவம்.
ஓர்புவியில் ஈர்நிலையாம் ஒண்பகல்அல் நாள்நூறின்
சீர்தொடுக்கின் மூன்றுடன் சேர்;சீர்நாட்கைந்-தோர் மூன்றாம்
ஆர் பெருக்கல் செய்;உடன்எண் ஐந்தினைச் சேர்;புத்தாண்டே 
பார் !தமிழ்நேர் !சீர்பகர்நல் வாழ்த்து!

                                                   -புலவர்.சி.பாண்டுரங்கன்.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான இரண்டு வெண்பாக்களை
பதிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி
தொடர்ந்து படைப்புகளைத் தர வேண்டுகிறேன்

Murugeswari Rajavel said...

நன்றி ரமணி சார்.