Thursday, July 8, 2010

ஐம்பது

ஆடி அடங்கும் வாழ்வினிலே-பண்
பாடி முடித்திட்ட பாதி நிலை

இன்பமும்,துன்பமும் ஐம்பதைம்பதாய்ப்
பார்த்து அனுபவம் சேர்த்த அபூர்வ நிலை

முன் நிலை நினைத்து மனம் ஏங்கும்
பின் நிலை நினைத்து மனம் பயம் தாங்கும்

செக்கு மாடு வாழ்வானாலும் தேசம் பல
சென்று கண்ட வாழ்வானாலும்

சேகரித்த அனுபவம் சிந்தையிலே பல கோடி
மலரும் நினைவுகளில் மனம் மூழ்கிடினும்
மரண பயமும் எட்டிப் பார்க்கும்

கலக்கம் கழற்றி வாழும்
கலையினால் என்றும் களிப்பே!

No comments: