Thursday, November 4, 2010

திருமலையில் திருவிழா

         அம்மம்மா !ஆனந்தம்
         அப்பப்பா !  பரவசம்
அழகுக் காட்சி!அதிசயக் காட்சி!
அதனைப்  பருகிய  கண்களே சாட்சி!
தேவலோகக் காட்சி  கண்டேன்
       


         மஞ்சள்   தங்கங்களாய்
         சோடியம்  விளக்குகள்
         மின்னும்  வைரங்களாய்
         வெள்ளொளி  வெளிச்சங்கள்


மலை மீது  முகில்கள்  கூட்டம்
பிரதிபலித்ததே  கண்ணாடியாய்
விண்மீன் கூட்டத்தை வீதியிலும்
வீதியின் வெளிச்சங்களை
விண்மீனின்  கூட்டங்களுமாய்


                கண்கள்  பருகிய காட்சியை
                அகத்திலும்  நிறைத்ததாலே
                ஆனந்தக்  களிப்பு!

No comments: