மன சாம்ராஜ்யத்தின் மன்னனே!
ஆகாயம் நீ -உன்னுள்ளே
அகில உலகும் அடங்கட்டும்!
கிருஷ்ணனாய் லீலைகள் காட்டு,
கிருஷ்ண லீலா காட்டாதே!
உங்கு உங்கென்று உன் சங்கநாதம்
முழங்கினால்,
தமிழ் கூடக் கசக்கிறதே.
தமிழாலே தாலாட்டுவேன்
தமிழாலே சீராட்டுவேன்
தரமாய் வளர்ந்திடு!
தமிழோடு வளர்ந்திடு!!
தன்னிகரற்று வாழ்ந்திடு!!!
பஞ்சுப் பொதியே,அஞ்சுகமே
அஞ்சாமல் வாழ்ந்திடு!
அஞ்சி ஒதுக்கு ஆகாததை.
ரோஜாக் குவியலே-எங்கள்
ராஜா நீ !
3 comments:
குழந்தையும், கவிதையும் அருமை....
//தமிழாலே தாலாட்டுவேன்
தமிழாலே சீராட்டுவேன்
தரமாய் வளர்ந்திடு!
தமிழோடு வளர்ந்திடு!!
தன்னிகரற்று வாழ்ந்திடு!!!//
அழகான வரிகள்...
Word Verification எடுத்துவிடுங்க...
நன்றி சதீஷ்!
என் பேரக் குழந்தை தான்.
akkaa baby super..
Post a Comment