Sunday, August 7, 2011

நட்பு

பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
செய்து ஆங்கு அமையாக்கடை?
நட்பு,
அந்த அழகிய வார்த்தை
தந்த அகர வரிசையில்
மற்றொரு பரிமாணம்
இந்த நட்பு,
குறிஞ்சி மலர் தான்
ஆம்! இது சற்று வித்தியாசமானது
பன்னிரு ஆண்டுக்கொரு முறை
மலர்ந்தது அல்ல,
பன்னிரண்டு ஆண்டாய்
மலர்ந்திருந்தது.
அனிச்சமாய் சில தருணங்கள்
அமைந்து பட்டிருக்கலாம்
ஆனாலும் என்ன?
மலரும் நினைவுகள் -என்றும்
சுகமே
மனதின் நினைவுகளில் -நீங்கா
இடமே!

4 comments:

Chitra said...

மலரும் நினைவுகள் -என்றும்
சுகமே
மனதின் நினைவுகளில் -நீங்கா
இடமே!


...very nice.

Yaathoramani.blogspot.com said...

மலரும் நினைவுகள் -என்றும்
சுகமே
மனதின் நினைவுகளில் -நீங்கா
இடமே!//


மிகப் பிரமாதமான வரிகள்
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Murugeswari Rajavel said...

நன்றி சித்ரா.

Murugeswari Rajavel said...

நன்றி ரமணி சார்.